Saturday 16 October 2021

தியாகராயரின் புகழ்

💐 *ஜெய்ஸ்ரீராம்* *தியாகராயரின் புகழ்* *வீட்டு திண்ணையில் *அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு* *இராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார்*. *எதிரே ஒரு வயதான தம்பதி அருகே, கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன். மெல்லிய குரலி ல் அந்த முதியவர் பேச ஆரம்பித்தார்*. '' *ஸ்வாமி, நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலி ருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணி ட்டு வரோம். நாளை ராமேஸ்வரம் போகணும். இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க இடத்துல தங்கிவிட்டு , காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம். தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யணும்*.."' *மெல்லிய குரலில் , பேசினார் அவர்; வயதான அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள் , முகங்களில் தெரிந்த களைப்பு , வாட்டம் மற்று ம், பேச்சில் தெரிந்த ஆயாசம் இவையெல்லா வற்றையும் தாண்டி , அம்மூவரின் முகலாவண் யமும் , தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது*. *ஒருகணம் நிலை தடுமாறியவர் பின், மெலிதா ன புன்னகையுடன் , இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார்* ; '' *அதற்கென்ன* *பேஷாய் தங்கலாம்*. இரவு *போஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ*" *அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர செய்தவர் பின், அடுக்களையை நோக்கி, உரத் த குரலில்* , '' *கமலா,குடிக்க தீர்த்தம்* *கொண்டு வா* ..'' என்றார்* ; *அடுத்த கணம் தீர்த்த சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின்* *கண்கள், அங்கு அமர்ந்திருந்த புதியவர்களை கண்டு வியப்பி ல் விரிந்தன*. ' *யார் இவர்கள்* ?' '' *கமலா ...'' தியாகராஜரின் குரல் அவளை தட்டியெழுப்பியது* ; '' *கமலா இவர்கள்* * *நமது விருந்தாளிகள்*. *இன்று நமது* *கிருஹத்தில் தங்க போகிறார்கள்* .. *இரவு உணவை இவர்களுக்கும் சேர்த்து தயார் செய்*'' *தீர்த்த சொம்பை அவளிடமிருந்து வாங்கியவா றே இயல்பாய் பேசினார் அவர்* ; ' *அடடா, வீட்டில் இரண்டு பேர்களுக்கு போது மான அரிசியே இல்லை .இப்போது, ஐந்து பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானால் அரிசிக்கு என்ன செய்வது ? பக்கத்து வீட்டு க்கு சென்று அரிசி வாங்கி வர வேண்டியது தான்* ' *உள்ளுக்குள் எண்ணியவள் , பின் எதையும் வெளிக்காட்டாமல், புன்னகையுடன் அவருக்கு தலையசைத்து விட்டு , அடுக்களையை நோக்கி விரைந்தாள் ; போன வேகத்திலேயே, அங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றை கையில் எடுத்தவள், பின் அதை யார் கண்ணிலும் படாமலிருக்க புடவையால் மறைத்தவாறு அங்கிருந்து வெளியே வந்த அக்கணம் அந்த சிறிய கூடத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவ ரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது* ; '' *அடடா, எங்கே செல்கிறீர்கள் அம்மா? எங்களுக்காக சிரமப்பட வேண்டாம். எங்களிடம் , வேண்டிய அளவு தேனும், தினை மாவும் இருக்கி றது. இரண்டையும் பிசைந்து ரொட்டி தட்டி , நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம்.'' அவ ளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று பேசியவரை, வியப்புடனும் , தர்மசங்கடத்துட னும் அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அவள் சற்றும் எதிர்பாராத கையில் , தேனும் , தினை மாவும் அடங்கிய ஒரு சிறிய பையை அவளிடம் நீட்டினார் அந்த முதியவர்*. *தயக்கத்துடனும், சங்கோஜத்துடனும் அதனை பெற்று கொண்ட அவள், உணவுத்தயாரிக்க அடுக்களையை நோக்கி விரைந்தாள்*. *அன்று இரவு, அனைவரும் அந்த ரொட்டியை சாப்பிட்டு பசியாற தியாகராஜர், அவர்களுட ன் விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு , பின், ஒரு கட்டத்தில் உறங்கி போனார்*. *பொழுது விடிந்தது, காலைக்கடன்களை முடித்து விட்டு, கூடத்தில் அமர்ந்து, வழக்கம் போல கண்களை மூடியவாறு, ராம நாமத்தை ஜபித்தவாறிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு கண்களை திறந்தார*.. " *ஸ்வாமி .." எதிரே புன்னகையுடன் அந்த முதியவர். அருகே, அவரின் பார்யாளும், மற்று ம் அந்த இளைஞனும் . அந்த முதியவர் தொடர்ந்தார்*. '' *ரொம்ப சந்தோஷம், நாங்க காவேரியில் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே கிளம்பறோம் இரவு தங்க இடம் கொடுத்து வாய்க்கு ருசியாய் ஆகாரமும் கொடுத்து அன்பாய் உபசரித்தத ற்கு மிக்க நன்றி* ..'' *கூப்பிய கரங்களுடன்* அந்த முதியவர் பேச, *அருகே அந்த மூதாட்டியும், இளைஞனும் அவரின் வார்த்தைகளை ஆமோதிப்பது போன்று* *தலையசைத்தவாறு நின்றிருந்தனர சொல்லி விட்டு மூவரும் அங்கிருந்து கிளம்ப, தியாகரா ஜரும்* அவர்களை *வழியனுப்பும் நிமித்தமாய் , அவர்களுடன் வாசலுக்கு வந்தார்*. *அவர்கள் மூவரும் வாசலை கடந்து , தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க, அவர்கள் செல்வ தை கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிரு ந்த தியாகராஜரின் கண்களில் ' சட்டென்று ' ஒரு தெய்வீக காட்சி இப்போது அந்த வயோதி கர் ஸ்ரீ ராமனாகவும் அந்த மூதாட்டி, சீதையாக வும், அந்த இளைஞன் அனுமனாகவும் தோற்ற மளிக்க அவருக்குள் இனம் புரியாத ஒரு பதை பதைப்பு*. *கண்கள் பனிசோர நா தழுதழுக்க* *தன்னை மறந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார்*. '' *என் தெய்வமே, தசரதகுமாரா, ஜானகி மணாளா, நீயா என் இல்லத்துக்கு வந்தாய்?. என்னே நாங்கள் செய்த பாக்கியம் அடடா, வெகு தூரத் திலிருந்து நடந்து வந்ததாய் சொன்னாயே , உன் காலை பிடித்து அமுக்கி, உன் கால் வலி யை போக்குவதை விடுத்து , உன்னை தூங்க விடாமல் விடிய விடிய பேசிக்கொண்டே இருந் தேனே. மகாபாவி நான், என் வீட்டில் தரித்திரம் தாண்டவ மாடறதுன்னு தெரிஞ்சு , ஆகாரத்தை யும் கொண்டு வந்ததுடன், ஒரு தாய் தகப்பனா யிருந்து எங்கள் பசியையும் போக்கினாயே ! உனக்கு அநேக கோடி நமஸ்காரம்*'' *நடு வீதி என்பதையும் மறந்து கண்ணீர் மல்க கதறி அழுதார் தியாகராஜர். அப்போது அவர் திருவாயினின்று, அனிச்சையாய்* , '' சீதம்ம.....மாயம்ம...'' *என்கிற கீர்த்தனை பிறந்தது*... *ஸ்ரீ ராம் ஜெய ராம். ஜெய ஜெய ராம் சீதாராம்*...

No comments: