Wednesday 14 October 2020

Good Question, Ultimate reply.

 சார் , பிரிட்டீஷ் அரசு வரவில்லை என்றால் நீங்கலாம் படிச்சுருக்க முடியாது. ரயில், மருத்துவம், கல்வி கிடைத்திருக்க அவன் தான் காரணம்? இப்படி பொதுவாக கிருஷ்தவ மதம் மாற்றும் பாதிரியார்கள் , பெரியார்(ஈவேரா) பகுத்தறிவு கூட்டங்கள் பேசுவதில் நியாயம் இருக்கிறதா? இதைபற்றி உங்கள் விளக்கம் மாரிதாஸ்?{கேள்வி: கார்த்திக்}

1912ல் பிரிட்டீஷ் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் வெளியிடப்படுகிறது. அது என்னவென்றால் இந்திய நிறுவனங்கள் எதுவும் ரயில் இஞ்சின் சார்ந்த எந்த உற்பத்தியும் செய்ய கூடாது, முழுமையாக தடை செய்கிறோம். எதற்கு இந்திய நிறுவனங்கள் தயாரிக்க கூடாது?
1843ல் ரயில் பிரிட்டீஷ் ரயில் இந்தியாவில் அனுமதித்த போது என்ன காரணம் என்று அவர்களே வெளியிட்டு உள்ளனர். அந்த விவகாரத்தை பின்னர் விளக்குகிறேன். பின்னர் மெல்ல 1860களில் ரயில் இந்தியாவில் முழுமையாக ஓட தொடங்கின. இந்த நேரம் அந்த ரயில் இஞ்சீன் பழுதுபார்க்கும் வேலை சில நேரம் இந்தியர்களிடம் கொடுக்கபட்டது. நன்கு புரிந்து கொள்ளுங்கள் 1900களை தாண்டியும் கூட 90% ரயில் ஊழியர்கள் இந்தியர்கள் தான். இஞ்சின் ஓட்டுவது, ஸ்டேசன் மாஸ்டர் என்று அனைத்து பெரிய பொறுப்பிலும் ஆங்கிலேயர் இருந்தனர். இந்தியர்களுக்கு எந்த ஊதிய உயர்வும் கிடையாது, எந்த பதவி உயர்வும் கிடையாது - சம்பளம் மிக மிக மிக குறைவு.
இந்த நிலையிலும் பழுதுபார்க்கும் வேலை 1862ல் இந்தியர்கள் செய்ய அனுமதி அளித்த அடுத்த 10 வருடத்தில் இந்தியர்கள் தாங்களே ரயில் இஞ்சின் தயாரிக்கும் அளவுக்கு திறமை பெற்று - இஞ்சின் உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதாவது கற்றுகொள்வது கொஞ்சம் அதிகம் ஆர்வம் உள்ள ஆட்கள் இவர்கள். எனவே 1878களில் Indian locomotives உற்பத்தி அதிகம் ஆக - உடனே தடை செய்தார்கள் பிரிட்டீஷ். இத்தனைக்கும் மிக மிக குறைந்த செலவில் செய்த போதும் தடை விதிக்கபட்டது.
காரணம் அவர்கள் தொழில்நுட்பம் இந்தியர்கள் கைக்கு செல்ல கூடாது. ஆனால் இந்தியர்கள் உழைப்பில் கிடைக்கும் வருமானம் மட்டும் இவர்களுக்கு தேவை. இது அனைத்து துறைகளிலும் நடந்த உண்மை. அதாவது இவர்கள் எந்த தொழில் நுட்பத்தையும் இந்தியர்க்கு கொடுத்துவிட்டு போகவில்லை.
ரயிவே துறையில் கிடைத்த வருமானம் முழுக்க பிரிட்டிஷ் அரசுக்கு சென்றது. அதை என்ன இந்தியாவிலா முதலீடாக செய்தனர்??? இல்லை கிடைத்தா லாபத்தில் இந்தியர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தனரா????
எடுத்துக்காட்டுக்கு 90,000இந்திய மக்கள் வருமானமும் அன்று ஒரு பிரிட்டீஷ் ஸ்டேட் செகரட்டரி ஒரு மாத சம்பளமும் ஒன்று.
ரயில்வே துறையில் இந்தியர்கள் நாயை விட கேவலமாக வேலை பார்த்து பற்றி என்னால் இன்னும் அதிகம் பேச முடியும். இன்று இந்தியாவிடம் இருக்கும் அத்தனை தொழில்நுட்பமும் இந்தியா தானே உருவாக்கிக்கொண்ட விஷயம். இந்தியர்கள் முட்டாள்கள் இல்லை வாய்ப்புகள் கொடுக்காமல் மறுக்கபட்டு ஒடுக்கப்பட என்ன செய்ய முடியும் இந்தியவர்களால்? இதை இத்தோடு விட்டு விட்டு அடுத்து ஆடை உற்பத்திக்கு செல்வோம்.
------------------------------------------------------
ஆடை உற்பத்தி ?
பிரிட்டீஸ் விட்டு செல்லும் போது இந்தியாவில் வீட்டுக்கு 1,2 சேலை கூட கிடையாது. அந்த அளவுக்கு ஆடை என்பதே ஆடம்பரம் என்ற நிலையில் மிக கொடூரமான ஒரு பெரும் அழிவை இந்தியர்களின் ஆடை உற்பத்தி தொழிலில் உருவாக்கி இருந்தார்.
இந்தியர்கள் தான் உலகத்தில் பருத்தி விளைச்சல் , அதை எடுத்து நூல் செய்து , நூலைகொண்டு ஆடை நெய்யும் புத்திசாலித்தனம் முதலில் பெற்றவர்கள். woven ஆடைகளும் பிரமாதமாக செய்வார்கள். இதை பெரும்பாலான கிரேக்க வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஏறக்குறைய 3000வருடம் மேலாக இந்த நாட்டில் நல்ல பருத்தி ஆடைகளை இவர்கள் உடுத்தினர், அதை சார்ந்த தொழில் நுட்பம் இவர்களுக்கு பரம்பரை பரம்பரையாக இருந்துவந்தது. அலெக்சாண்டர் வரலாற்றில் இதன் குறிப்புகள் உண்டு.
பெங்கால் , ஆந்திரா , தமிழ் நாடு, குஜராத் என்று எல்லா இடங்களிலும் 17ஆம் நுற்றாண்டு இறுதி வரை கூட மற்றநாடுகளுக்கு ஏற்றுமதி நடந்தது. இதற்கு பக்கா ஆதாரங்கள் இந்தியாவிடம் உண்டு. துருக்கி , ஜாவா , சீனா , ஜப்பான் என்று ஏற்றுமதி ஆனா வரலாறு உண்டு.
சரி ஏன் அவை அடியோடு அழிந்து போனது???
வேறு என்ன காரணம் பிரிட்டீஷ். இவர்கள் காலனிநாடுகளில் எங்கேயும் இந்தியர்கள் ஆடை இறக்குமதிக்கு 70%முதல் 80%வரை வரி விதித்தனர். அது ஏன்? ஏன் என்றால் பிரிட்டீஷ் உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் ஆடை விலை மிக மிக அதிகம், அதே ஆடை இந்தியர்கள் மிக குறைந்த செலவில் ஏற்றுமதி செய்ய உலகமே இந்தியர்களை விரும்பியது. அதை எப்படி தடுப்பது???? போடுடா வரியை... எவனும் இந்தியர்கள் ஆடையை வாங்க கூடாது , வாங்க முடியாது. அந்த அளவு விலை ஏறியது.
தொழில் போட்டிக்கு வக்கு இல்லாத பிரிட்டிஷ் தொழில்சாலைகள் அதிகாரம் கொண்டு இந்திய தொழில்சாலைகளை ஒடுக்கினர்.
காலணி நாடுகளில் இந்தியர்கள் நெய்த ஆடைக்கு பல மடங்கு வரி விதிக்க - என்ன மிச்சம் இருக்கும் இந்திய தொழிலாளர்க்கு? வியாபாரிகளுக்கு? நாசம் அல்ல - சர்வ நாசம் ஆகிப்போனது இந்த அற்புதமான மக்களின் ஆடை செய்யும் தொழில்நுட்பம், வியாபாரம்.
பெங்கால் பகுதியில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 16,000,000 அதாவது இன்றைய மதிப்பில் சுமார் லட்சம் கோடி வருமானம் ஈட்டிய நாட்கள் 17ஆம் நூற்றாண்டு. {2469.0% விலை தங்கள் குறைவாக கிடைத்த காலம். அதாவது சுமார் 1கிராம் தங்கம் 1.7ரூபாயாக இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம் என்று கொஞ்சம் கற்பனை செய்யவும்.}
{15ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை கூட இந்தியா முழுவதும் தங்கம் அதிகம் கிடைக்க காரணமே இந்தியர்களின் வியாபார திறமையும் , தொழில் திறமையும் தான். அதை வாஸ்கோடகாம வந்த பொழுதே குறிப்பாக அறியலாம். பின்னர் இந்த தேசம் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர் அனைவரும். இந்தியா சென்றால் தங்கம் நிச்சயம் கிடைக்கும் என்ற பேராசையில் இந்த தேசம் சூறையாடியது உலகமே.}
ஆக இறுதியில் தனக்கே ஆடை இல்லாமல் நின்றான் இந்தியன். இதை இப்படி எடுத்துகொள்ளுங்கள் உலகத்தில் 4ல் ஒருவர் இந்தியாவில் உற்பத்தியான ஆடையை அணிந்தனர் 17ஆம் நூற்றாண்டு வரை அது தான் உண்மை. 18 ஆம் நுற்றாண்டு தொடக்கத்தில் - அப்படி இருந்த நாடு தொழில் வளர்ச்சி நாசம் ஆகி நடுதெருவுக்கு வந்தது இந்த முட்டாள் தனமான பிரிட்டீஷ் வியாபார உக்தியால்.
ஏன் முட்டாள்கள் என்கிறேன்???? இங்கே காலணி நாடுகளில் வியாபாரம் நல்ல நிலையில் இருந்தால் தானே வரி வழூல் செய்து பிரிட்டீஷ் ஆட்சியரும் நல்லா இருக்குலாம் காலணி நாட்டு மக்களும் நல்லா இருக்காலம். அப்போ இந்திய தொழில் வளர்ச்சி மறைமுகமாக அவர்களுக்கும் லாபம் தானே? ஆனால் தாங்கள் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் , தாங்கள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் - இந்தியர்கள் அடிமைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற முட்டாள் தனமான அதிகார புத்தியால் பொருளாதாரம் நாசம் ஆகி போனது.
ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால்:
1865களில் அமெரிக்கன் சிவில் வார் ஆரம்பித்த நேரத்தில், இரண்டாவது முதல் உலக போர் ஆரம்பமான காலத்தில் இந்த இரண்டு காலத்திலும் ஏற்றுமதி கட்டுபாடுகளை தளர்த்தியது பிரிட்டீஷ் - அந்த இரண்டு நேரத்திலும் இந்தியர்கள் மீண்டு எழுந்து மீண்டும் உலக சந்தையை பிடித்தனர். அதாவது 1865ல் தளரத்திய உடன் மீண்டும் எங்கள் இந்தியர்கள் ஆடை உற்பத்திக்கு பெரிய அளவில் தேவை உருவாக 1896ல் மொத்த உலக உற்பத்தியல் இந்தியர்கள் 8-9% பங்களிப்பை வழங்கினர். ஆனால் மீண்டும் முடக்கிவிட்டனர். அடுத்து முதல் உலகப்போர் முடிவில் 1936ல் உலக ஆடைகள் உற்பத்தியில் இந்தியர்களின் பங்கு என்ன தெரியுமோ ? 68%. அதாவது உலகத்தில் 10ல் 7பேர் இந்தியர்கள் ஆடையை அணியும் அளவுக்கு பெரும் வளர்சி பெற , மீண்டும் ஆடை உற்பத்தி, இறக்குமதிக்கு மீண்டும் வரி கொண்டு நசிக்கி நாசம் செய்தனர் பிரிட்டீஷ்.
அமெரிக்கன் ஆயுதங்களை தயாரிப்பதில் வெற்றிபெற்ற ஒரே காரணம் தான் பிரிட்டிஷ் கீழ் இந்தியா வர காரணம். வேறு எந்த காரணமும் இல்லை. தொழில் , வியாபாரம் எல்லாமே இந்தியர்கள் பலமடங்கு அவர்களை விட முன்னேறிய சமூகமாக இருந்தனர். இது தான் அசைக்க முடியாத உண்மை.
------------------------------------------------------
கல்வி???
அந்த கல்லூரி இந்த கல்லூரி கட்டி கொடுத்தான் என்ற கூப்பாடு இருக்கட்டும் 200 வருடம் ஆட்சியில் இருந்துவிட்டு கல்வி கொடுத்துவிட்டு சென்றான் என்றால் எடுத்து புள்ளிவிவரம் பாருங்கள். 1947இந்தியா சுதந்திரம் வாங்கும் பொது 12% தான் படித்தவர்கள் என்று கூறுவது கூட சரியான கணிப்பு அல்ல , உண்மையில் அது 7%க்கும் கீழ்.
அதாவது 200வருடம் இந்த பிரிட்டீஷ் ஆட்சியில் 7% படித்து முன்னேறி இருந்தோம். 1947க்கு பின் இந்தியர்கள் தங்களை தாங்களே ஆட்சி செய்த இந்த கடந்த 60வருடத்தில் ஏறக்குறைய 80% படித்தவர்கள் என்ற நிலையை எட்டிவிட்டோம். இந்த விசயத்தில் யார் சிறந்தவர்கள்????
இந்த கல்வி முறையே அவன் கொடுத்த பிச்சை என்று பேசும் விச பாம்புகள் இந்த பாதரியார்களுக்கு நான் கூற விரும்புவது கொஞ்சம் 12ஆம் நூற்றாண்டுவரை கொரியா , சீனா , இந்தோனேசியா என்று ஆசியா முழுவதும் சில ஐரோப்பிய தேச தலைசிறந்த வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும் எங்கே படித்தவர்கள் என்று கொஞ்சம் விவரம் தேடி படிக்கவும்.
நாலாந்தா , விகரமாசிலா , ஓடந்தபுரி , மகவிஹரா என்று நாங்கள் தான் உலகம் முழுவதும் கல்விகளை சென்று சேர்த்தவர்கள். 12ஆம் நூற்றாண்டு வரை உலகமே கல்விக்கு இந்தியா தான் சிறந்த இடமாக இருந்தது.
2,000ஆசிரியர்கள் , 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்தது உலகத்தில் எங்க நாலந்தா கல்வி கூடத்தில் தான். அது ஏதோ இன்று நேற்று அல்ல - 1200கிபி வரை நன்றாவே இயங்கியது. இது போல பல்கலைக்கழகம் சென்று கல்வி பயின்ற ஆசிரியர்கள் பின்னர் அங்கிருந்து பிரிந்து குருகுலம் நடத்தி கல்வியை கொடுப்பது இந்த இந்தியாவின் கலாச்சாரம்.
ராஜா ராம்மோகன் ராய் 19ஆம் நுற்றாண்டில் கிராமங்களில் பள்ளிகள் தொடங்கி கல்வி கற்பிக்கும் முறையை அறிமுகம் செய்ததாக எங்களுக்கு வரலாறு இருக்கு. இது போல பல மனிதர்கள் பல முயற்சிகள் கிராமங்களில் செய்தனர்.
அதாவது எல்லோரும் காசி , நலந்தா என்று சென்று படித்துவிட்டு பின்னர் நாடு , ஊர் திரும்பி மக்களுக்கு கல்வி கொடுப்பது என்று சுமார் 2000வருட பழைய குருகுல கல்விமுறை இந்த இந்தியாவில் இருந்தது. உலகம் முழுவது 12ஆம் வகுப்பு வரை படிப்பதே காரணம் இந்தியாவில் குருகுல கல்வி 12ஆண்டுகள் சொல்லி கொடுத்த பாதிப்பு தான் ஒழிய வேறு இல்லை.
{ஜாதி கொண்டு கல்வி மறுக்கும் கீழ்தரமான புத்தி என்னவோ இந்தியார்களுக்கு 800கிபிக்கு பின் தான் வந்திருக்க வேண்டும். ஏன் என்றால் அதுவரை அனைவருமே கல்வி கூடங்களுக்கு சென்று படித்த வரலாறு உண்டு. குலம் என்பது பிறப்பால் அல்ல என்ற விஷயம் மறந்து- பிறப்பால் ஜாதியஅடையாளம் என்ற கட்டமைப்பு என்று உருவானதோ அன்று நாசமாக தொடங்கியது இந்த மண். அதற்காக பிரிட்டீஷ் ரெம்ப நல்லவன் கிடையாது. அங்கேயும் அடிமைகள் காலச்சரம் இருந்து வந்தது.}
சரி எதனால் கல்விமுறை இங்கே பிரிட்டீஷ் கொண்டுவந்தது?
1820களில் மிக பெரிய அளவில் பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் உள்ள அனைத்து நாடுகளிலும் மதம் மாற்றும் வேலைக்கு அனுப்பபட்டார்கள், அவர்கள் Evangelist. இந்த Evangelist வேலை மதம் மாற்றுவது - பிரிவினைகளை உருவாக்கி அதன் மூலம் மதம் மாற்ற வேண்டும். இங்கே மட்டும் அல்ல அனைத்து காலணி நாடுகளிலும் இந்த கூட்டம் சென்று வேகமாக வேலை செய்தது. எனவே ஆங்கிலம் கட்டாயம் ஆக்கபட்டது, அவர்கள் கூறும் வரலாறு தான் படிக்க வேண்டும் என்ற நிலை உருவானது.
இன்றுவரை வாஸ்கோடா காமா முதல் முதலில் இந்தியா வந்தார் என்று தான் படிக்கிறோம். என்ன செய்ய? அவர் வருவதற்கு முன்பே இந்தியர்களின் வர்த்தகம் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருந்தது என்பதற்கு மிக பல ஆதாரங்கள் உண்டு. இன்னும் சொல்வதானால் வாஸ்கோடாகாம வரும் போது இங்கே இந்திய மன்னர்கள் அரபு வணிகர்கள் , இந்தோனேசிய வணிகர்கள எல்லோரும் இருந்ததாக தானே கூறியுள்ளார். ஆனாலும் அவர் தான் முதலில் வந்தார். யாருக்கு? பிரிட்டீஷ் காரர்களுக்கு ஒரு போர்சுக்கள் காரர் வந்தது தான் முதல் வரலாறு. எங்களுக்கு அல்ல. ஆனாலும் நாங்கள் இந்த வரலாற்றை படித்து தொலையவேண்டியதாக உள்ளது. அதுக்கு காரணம் நேரு.
இன்னொரு சுவாரசியமான விஷயம் :
எகிப்த மன்னன் Ramesses II இறந்த பதபடுத்தபட்ட உடலில் இருந்து தற்போது கெய்ரோ மியுசியமில் உள்ளது. அந்த உடலில் x-ray examination செய்யபட்டபோது கிடைத்த தகவல்படி - அதில் பயன்படுத்த பட்டுள்ளது "மிளகு". அதாவது கிரேக்கம் , ரோமன் என்று எந்த பழைய நாகரீகமும் இந்திய நாகரிகத்துடன் வணிகம் செய்து வந்ததற்கு பல ஆதாரம் உண்டு - அது எவ்வளவு பழமையானது என்று இதை வைத்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த மிளகு வரலாறு கொஞ்சம் படிங்க நாங்க யார் என்பது தெரியும்.
எனவே நோக்கம் மதம் மாற்றவேண்டும் , தங்கள் வரலாறு தான் உலக வரலாறாக படிக்கவேண்டும் , தாங்கள் சொல்வது தான் இந்திய வரலாறு என்று இருக்க வேண்டும் என்ற கேடுகெட்ட புத்தி. நாங்கள் இங்கிலீஷ் மேனின் காப்பி ஆகி போனோம். Imitative Englishmen என்பது தான் பெருமை என்று ஆகிபோக மதம் மாற்றுவது எளிதாகி போனது. அதனால் எங்கள் பாரம்பரிய கல்வி முறை அழிந்தது. இப்போ பலருக்கு வாஸ்கோட காமா தான் பெரிய ஆள். அவர் எதனால் வந்தால் வந்து என்ன அட்டுழியம் செய்தார் என்பதெல்லாம் பலருக்கு தெரியாது.
பிஜேபி சமிபத்தில் வரலாற்றை மாற்றி எழுதுவதாக கூப்பாடு போடும் வெளிநாட்டு ஊடகங்கள் ஏன் கதறவேண்டும்???? ஏன் என்றால் பிஜேபி உண்மையான வரலாற்றை மாற்றி எழுத விரும்புகிறார்கள். சும்மா ரயில் , மருத்துவம் , கல்வி என்று பிரிட்டீஷ் ஒரு முகத்தை மட்டும் நடத்துவது தான் இங்கே இருக்கும் பெரிய தவறு என்று மாற்றி உண்மையை எழுத கூச்சல் போடுகிறார்கள்.
--------------------------------------------------------------------
மருத்துவமனைகள்?
1782, 92, 1803 , 1804 , 1820 தொட்டு இரண்டாண்டுக்கு ஒருமுறை வறட்சியும் வறுமையும் மக்களை வாட்டி வதைக்க காரணம் என்ன? 1838வரை நம்மிடம் தெளிவான தகவல்கள் இருக்கு. அதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் கூட்டம் கூட்டமாக மக்கள் இறந்து போக அதற்கு எந்த விததிலும் தடுக்கும் முயற்சி எடுக்காமல் விட்டுவிட்டு வரியை மட்டும் கராறாக பெற துடித்தனர் பிரிடீஷ்.
இந்தியாவில் தொடர்ந்து வரட்சி , வறுமை , நோய் தாக்குதல் ஒவ்வொரு ஆண்டும் பரவ காரணமே இந்த முட்டாள் பிரிட்டீஷ் அரசு தான். என்ன சொல்கிறீர் முட்டாளா??
ஆம் , இந்தியார்கள் உழைப்பின் மூலம் பிரிடீஷ் அரசுக்கு 1922களில் வந்த வருமானம் மொத்த வருமானத்தில் 64%. அதாவது பிரிட்டீஷ் உலகம் முழவதும் காலணி நாடுகள் நடத்தலாம் ஆனால் வருமானம் கொட்டியது இந்தியாவில் தான். 100ரூபாயில் 64 ரூபாய் இந்த மக்களை ரத்தம் போல உறிஞ்சி தான் வாழ்ந்தனர்.
அப்படி வருமானம் கிடைக்கும் இந்த மக்கள் கொஞ்சமாது நல்ல இருந்தா தானே இன்னும் வருமானம் அதிகம் ஆகும்??? உழைப்பவன் நாசம் ஆகிவிட எங்கிருந்து வருமானம் கிடைக்கும்????? இந்த அறிவு இல்லாமல் காலரா , அம்மை என்று பரவினால் என்ன ஆகும்?
சென்னை ஒரிஸா பிகார் பம்பாய் என்று இந்தியா முழுவதும் வறுமையில் அதாவது உணவு இன்று இறந்தவர்கள் 1700- 1900 குள்ளாக மட்டும் சுமார் 2.5கோடி மக்கள் இறந்து போனார்கள். இந்த மாதிரி ஒரு கேவலமாக ஆட்சியை உலகத்தில் எவனும் இதற்கு முன்னர் கொடுத்திருக்க மாட்டான். 1900-1947குள்ளாக 1.5கோடி மக்கள் வறுமை காரணமாக இறந்தனர். மன்னர்கள் காலத்தில் இப்படி இறந்ததாக வரலாறு கிடையாது. அம்மை , மலேரியா போன்ற கொல்லை நோய்கள் பரவியது உண்டு. ஆனால் வறுமை இப்படி இருந்தது இல்லை.
இன்னொரு சுவாரசியமான தகவல்:
1866ல் ஒரிஸாவில் மிக பெரிய வறட்சி,. மக்கள் உணவுக்கு ஏங்கும் நிலையில் பிரிட்டன் அந்த பகுதியில் விளைந்த அரிசி சுமார் 1லட்சம் கிலோ அரிசியை பிரிட்டீஷ்க்கு ஏற்றுமதி செய்தது.. இங்கே பட்டினி சாவு , ஆனால் அவனுக்கு இங்கே உழைத்த மக்களின் அரிசி மட்டும் எந்த தடையும் இல்லாமல் சென்றது.
{1519-1939வரை சுமார் 53,00,000அடிமைகள் கொண்ட காலணி நாடுகளில் அடிப்படை கட்டுமான வேலைகள் , விவசாயம் என்று அனைத்து பார்த்தனர். அடிமைகள் என்றால் எல்லோருக்கும் ஆப்ரிக்க அடிமைகள் மட்டும் தான் நியாபகம் வரும். ஆனால் ஆப்ரிக்க மக்க 58% என்றால் இந்தியர்கள் 32% அடிமைகளாக உழைத்தார்கள். யார் குரல் கொடுத்தார் இவர்களுக்கு???}
பின்னர் இது பெரிய அளவு இந்தியாவில் உற்பத்தி பாதிப்பினை உருவாக்க - நேரடியாக பிரிடீஷ் வருமானம் வீழ்ச்சி கண்டது. என்ன செய்வர்??
மக்களுக்கு மருத்துவம் கொடுக்க முடிவு செய்தனர். எப்படி??? அப்போதும் இந்த மக்களிடம் இருந்த பழைய மருத்துவமுறைகளை முற்றிலும் அழிக்கும் வேலையும் , நல்ல தரமான மருத்துவ குறிப்புகளை இந்த மக்களிடம் இருந்து திருடும் வேலையும் தான் செய்தனர். எனவே காலனிநாடுகளில் குறிப்பிட்ட அளவு வருமானத்தை முதலீடு செய்வது மிக முக்கியம். அது மக்கள் நல்லா இருக்கணும் என்று காரணம் அல்ல - அப்போ தான் அரசுக்கு வருமானம் கூடும்.
சரி இப்படி அத கட்டுனேன் இதை கட்டுனேன் என்று கூறும் கூட்டம் கொஞ்சமாது பொருளாதார அறிவு இருக்கும் கூட்டமா???? நம்மிடம் 100ரூபாய் வருமானம் பெற்றால் நமக்கு எவ்வளவு செலவு செய்தான் என்று பார்கக்வேண்டுமா இல்லையா?
பிரிட்டீஷ் நமக்கு நம் வருமானத்தில் செலவு செய்தது வெறும் 0.2%கூட கிடையாது. அந்த முதலீட்டில் தான் இந்த மருத்துவமனை , கல்வி நிலையங்கள் எல்லாம் வந்தன. அப்போ பிரிட்டீஸ் அரசுக்கு எவ்வளவு கிடைத்திருக்கும் என்று கொஞ்சம் சிந்திக்கவும். அறிவு , நாட்டின் மீது அக்கரை இருக்கும் எந்த மனிதனுக்கும் இதன நியாயம் புரியும், மத பற்றால் இந்த நாட்டை விட்டுவிட்டு காசாவையும் , ஜெருசலம் , பாலஸ்தீனம் என்று இன்னொரு நாட்டின் மண்ணை புனிதம் என்று கருதும் யாருக்கும் இது புரியாது.
-----------------------------------------
இந்தியர்கள் வேறு என்ன செய்தோம்??
இந்தியர்களை அடிமைகளாக பிஜி , தென் ஆப்ரிக்க, மலேசியா, சிங்கபூர் என்று உலகம் முழுவதும் எடுத்து சென்று ஒரு கழுதைவியை விட மோசமாக வேலை வாங்கியதை பற்றிய வரலாறு படிக்கவும்??? அங்கே விவாசாயம் செய்ய கூறி செய்த கொடுமைகளை தெரியுமா?? தென் ஆப்ரிக்க மண்ணில் இந்த மக்கள் கரும்பு தோட்டத்தில் பட்ட கஷ்டம் ஒருவராது இங்கே அறிவார்களா??
அதாவது எந்த நாட்டிலும் இருந்து அடிமைகள் இங்கே வரவில்லை , இந்த மக்கள் தான் பிரிட்டீஷ் காலணி நாடுகளுக்கு சென்று அடிமைகளாக விவசாயம் முதல் தொழில்துறை வரை அனைத்தையும் செய்தனர். ஏன்???? ஏன் என்றால் இயற்கையாக இவர்கள் விவசாயம் முதல் வியாபாரம் வரை அத்துபடி. அதை அதிகாரம் கொண்டு சுரண்டினர் பிரிட்டீஷ் ஆட்சிர்கள்.
ராஜராஜ சோழன் காலத்துக்கு முன்பிருந்தே கப்பல் கட்டும் தொழில் நுட்பம் இங்கே இந்தியருக்கு கைவந்த கலை. மராட்டிய சிவாஜியிடம் 500க்கும் மேற்பட்ட கப்பல்கள் இருந்தன. கல்கொத்தா கப்பல் கட்டும் தொழிலுக்கு மிக பிரசித்திபெற்ற இடம். இப்படி வணிக ரீதியாக உயர்ந்த அளவில் இருந்த மக்களை கொண்டு 300க்கும் மேற்பட்ட கப்பல்களை சரக்கு சுமந்து செல்ல செய்ய கூறி அடிமை தனம் செய்த பிரிட்டீஸ் ஒரு ஒரு கப்பலை ஏற்றுமதி செய்ய இந்தியர்களுக்கு அனுமதி வழங்கியதா??? எங்கள் வா உ சிதம்ரம் பிள்ளை போன்றவர்கள் எடுத்த முயற்சியை நாசம் செய்ததோடு சிறை அல்லவா அடைத்தனர்.
தொழில் போட்டி என்றால் நேரடியாக மோதவேண்டும்.
போட்டுக்கு இந்தியர்கள் வளரவே கூடாது அடிமை அடிமை அடிமை என்று ஆக்கிவிட்ட இந்த பிரிட்டிஸ் அரசை இன்று தூக்கி கொண்டாடுகிறான் இந்த நியூஸ் 7 செய்தி சேனலில் திரியும் ஒரு ஒநாய்... காரணம் என்ன??? மதம் மதம், அவர் கிருஷ்டவ மதம் அவனை இந்த பூமியை புனிதம் என்று மதிக்க பழக்கவில்லை.
உலக போரில் இந்தியர்கள் இல்லை என்றால் இந்த பிரிட்டீஸ் அதன் நேச நாடுகள் ஒன்னும் இல்லாமல் ஹிட்லரிடம் அடிவாங்கி அழிந்து போகி இருக்குமே அந்த உண்மை ஏன் மறைக்கிறார்கள் பிரிட்டீஷ்???
பிரிட்டீஷ் வெற்றிக்கு யார் காரணம் - குட்டியா இந்தியர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைதத்தா????
ஜெர்மனி ஏன் தோற்றது??? காரணம் அவர்களிடம் போருக்கு தேவையான ஆயுதங்கள் , ஆடைகள் என்று அனைத்தையும் உற்பத்தி செய்து வீரர்களுக்கு அனுப்ப பெரிய அளவு labour இல்லை. ஆனால் பிரிட்டீஷ் அரசுக்கு 1,40,00,000 இந்தியர்கள் வேலை செய்தோம்.. அது மட்டுமா 25லட்சம் வீரர்கள் பிரிடீஷ் அரசுக்காக போரில் இறங்கினர் , இது தவிர் கப்பல் விமான படை என்று எல்லாவற்றிலும் கடைமட்ட ஊழியர்கள் இந்தியர்கள் தான். சுமார் 2கோடிக்கும் மேல். அதாவது ஜெர்மனி வேறு 3.5லட்சம் ஊழியர்களை கொண்டு தன் படைக்கு தேவையான உற்பத்தியை செய்ய , பிரிட்டீஷ் படைக்கு 1.5கோடி ஊழியர்கள் இந்தியாவில் வேலை செய்தனர்.
மீண்டும் கூறுகிறேன் வேறு எந்த நாட்டினரும் இந்த வேலையில் இல்லை. முழுக்க முழுக்க labour force பிரிடீஷ்க்கு கிடைத்தது இந்தியர்களிடம் தான். அது தான் முதுகெலும்பு வீரர்களுக்கு. ஆனால் எங்கள் நாட்டில் நாங்களே எங்களுக்கு அங்கீகாரம் இல்லாத ஒரு படிப்பை பள்ளிகளில் படிக்கிறோம்.
அந்த புண்ணியம் எங்கள் நேரு , நேரு குடும்பத்தை சாரும். தமிழ் நாட்டில் அதையும் விட கேவலமான திராவிட கட்சிகள் வரலாறு தானே படிக்கிறோம். வைக்கம் வீரர் ஈவே ராமசாமி என்று இன்றுவரை கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் வரலாறு நடத்தி மக்களை முட்டாள் ஆக்கும் கூட்டம் திராவிட கட்சிகள். இப்படி இருந்தால் எது தான் விளங்காது?
--------------------------------------------------
என்னால் ஒரு பதிவில் மொத்தமும் வெளியிட முடியாத நாசமான வரலாறு இந்தியர்களுடையது.
நேதாஜி போல் மாமனிதர்கள் நாட்டை ஆளாமல் போக கெட்ட நேரம் இந்த பாவம் இன்னும் இந்தியாவை விட்டு போகவில்லை.
-------------------------------------------------------
இறுதியாக :
1947ல் விடுதலை. அதன் பின் சரியோ தவறோ சட்டம் ஆட்சியர் எல்லாம் விடுங்கள். ஆனால் மக்கள் சுதந்திரம் கிடைக்க மீண்டும் எழுந்து உழைத்தனர். இன்று?
இன்று உலகத்தின் 4வது மிக பெரிய ராணுவம் இந்தியர்களுடையது;
உலகத்தின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், மிக பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 6இடத்தில்
textile exporters மீண்டும் இந்தியர்கள் 3ஆவது இடத்தை பிடித்துவிட்டோம்.
Space Research Organisations என்று எடுத்து பார்த்தால் - இந்தியா 5இடத்தில் உள்ளது.
கல்வி ? 7% என்று விட்டு சென்ற பிரிட்டீஷ் - இன்று 80%நெருங்கிவிட்டோம்.
பிரிட்டீஸ் தான் இந்தியாவில் கிரிக்கெட் சொல்லி கொடுத்தேங்க - இரண்டும் முறை உலக கோப்பையை வாங்கிவிட்டோம்.
{இந்த கட்டுரை எழுதும் போது உலகத்தின் global hunger index இந்தியர்கள் 100இடத்தில் இருபதாக செய்திகள் வெளிவருகின்றன. அதற்கு காரணம் அரசு அல்ல . ஏன் என்றால் உலகத்தின் பெரிய ஆளவு உணவு ஏற்றமதி செய்யும் நாடுகளில் முக முக்கியமானது இந்திய. இந்தியாவில் ரேசன் கடைகளில் இலவச உண்டு தொட்டு பள்ளிகளில் கூட இலவச உணவு உண்டு. பிரச்சனை மக்களுக்கு ஆரோக்கியமான உணவு எடுக்கும் பழக்கம் உருவாகவில்லை என்று தான் global hunger index தெளிவாக கூறுகிறது. அதை தனியாக் விளக்குகிறேன். உடனே இந்தியாவை அவமானம் செய்ய ஒரு கூட்டம் ஓடி வரும்.}
இன்னும் ஆயிரம் சாதனைகளை சொல்லி கொண்டே செல்லலாம். மிக மிக முக்கியம் இந்தியர்களிடம் இன்று இருக்கும் சாதனைகள் 99.9% பிரிடீஷ் அரசுக்கு எந்த சொந்தமும் கிடையாது அது ரயில்வே முதல் மருத்துவம் வரை. அது நாங்கள் 1947க்கு பின்னர் எங்கள் முயற்சியால் உருவாக்கி கொண்டது தவிர எவனுடைய பிச்சையில் வாழவில்லை. தெற்காசியாவில் எங்கள் தயவு இல்லாமல் எந்த அணுவும் நகராது - உலகத்தில் இந்தியாவை தவிக்கமுடியா சக்தியாக உருவாக்கியுள்ளோம்.
இந்த நாட்டை இந்த மண்ணின் அருமை, தியாகம், புகழ் என்று இவ்வளவு தெரியாமல் ஏன் இந்த கிருஸ்தவ மதம் மாற்றும் மக்களுக்கு பிரிட்டீஸ் பெரிதாக தெரிகிறது???
காரணம் - அவர் கொண்ட மதம் என்றால் இவர்களை விட கேவலமான ஒரு ஈன பிறவி இந்த மனித குலத்தில் வேறு கிடையாது. இப்படி நாட்டை நாசம் செய்த பிரிட்டீஸ் அரசை உயர்வாக பேசி திரியும் யாரையும் "தூக்கில் போடுங்கள் இல்லை சட்டம் கொண்டு சுட்டு தள்ளுங்கள்" என்று கூறுவேன்.
எதற்கு இவ்வளவு வெறி, கோபம்?
பிரிடீஷ் வரி வசூல் செய்யும் அதிகாரிகள் ஒருமுறை வரி கட்டாத காரணத்தால் கல்கொத்தாவில் ஒரு வியாபாரியின் மனைவியை நடு தெருவில் ஆடையை கழற்றி, நிர்வாணம் ஆக்கி பின்னர் செய்த கொடுமையை நான் படித்த போது தோன்றியது "இந்த அளவு மக்கள் தியாகத்தை, மதம் மாறிய ஒரே காரணத்தால் ஒருவன் பிரிடீஷ்க்கு வக்காலத்து வாங்குவான் என்றால் அவன் ஏன் உயிருடன் இங்கே இருக்கவேண்டும்?".
அதாவது நன்கு புரிந்து கொள்ளுங்கள் எனக்கு கோபம் பிரிடீஷ் மக்கள் மீது கிடையாது. அது வரலாறு , அவர்களுடைய முன்னோர் செய்த குற்றம். எனவே இன்று இருப்பவர்களிடம் நான் காட்டுவது ஏற்புடையது அல்ல. ஆனால் அதை சரி என்று வக்காலத்து வாங்கும் இங்கே இருக்கும் இந்த மதம் மாற்றும் கூட்டத்தை, பெரியார் என்ற ஈவே ராமசாமி கூட்டத்தை நான் வெறுக்கிறேன். இவர்கள் அழித்தொழிக்க பட வேண்டும் என்பேன்.
வரலாற்றை படித்துவிட்டு மனசாட்சியுடன் பேசுங்கள் - நான் (மாரிதாஸ்) கொண்ட இந்த கோபத்தின் நியாயம் புரியும்.
{பிஜேபி நாடுமுழுவதும் பள்ளிகளில் வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியை நான் முழுமையாக வரவேற்கிறேன்.}
-மாரிதாஸ்

சோமநாதர் ஆலயம்

 சோமநாதர் ஆலயம். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய உண்மை சரித்திரம்,

கி.பி. 1001ல் முஹம்மது கஜ்னி என்ற கொள்ளையன் செழிப்பாக இருந்த பாரத தேசத்தை நோக்கி தன் கவனத்தை திருப்பியதுதான் நம் நாட்டின் கொடூர சரித்திரத்திற்கு தொடக்கம். அச்சமயத்தில் பெரும் சக்ரவர்திகள் இல்லாமல் இருந்ததும் ஒரு பெரும் பின்னடைவு. சிற்றரசர்களால் ஆளப்பட்டிருந்த இன்றைய ஆப்கான் பகுதிகள், துருக்கிய கொள்ளைக்காரனுக்கு எளிதான விருந்தாகப் பட்டது. பல தடவை படையெடுத்து அவன் ஜெயபாலா என்ற அரசர் ஆண்டுவந்த இன்றைய பெஷாவர் என்ற பகுதியை பிடித்தான். பின்னர் அருமையான விளைநிலங்களை கொண்ட பஞ்சாப் பகுதிகளை அவன் பிடித்தான்.
அவன் பெரும்பாலும் ஹிந்துக்களின் கோவில்களை குறி வைத்தான். அக்காலங்களில் ஹிந்துக்கள் தனிப்பட்ட முறையில் சொத்துக்களை அதிகமாய் வைத்திருப்பதில்லை. மாறாக கோவில்களுக்கு அவற்றை வழங்கி விடுவார்கள். கோவில்களில் பொக்கிஷங்கள் வைக்கப்பட்டிருந்தன. அரசர்களுக்குள் போர் வந்தாலும் கோவில்களை யாரும் தாக்கும் வழக்கம் இல்லை. ஆனால் முஹம்மது கஜ்னியோ கொள்ளைக்காரன் ஆயிற்றே, அவனுக்கு ஏது தர்ம நெறிகள் ?
வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளை அவன் ஊடுறுவி, அழித்து பின் திரும்ப சென்று விடுவான். அவ்வாறு திரும்ப திரும்ப செய்து அவன் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் பயத்தை உண்டாக்கி இருந்தான். நாகர்கோட், தனேசர், மதுரா, கனௌஜ், கலிஞ்ஜர் மற்றும் சோமநாதபுரியில் அவன் இவ்வாறாக ஊடுறுவி, பேரழிவை உண்டாக்கி விட்டு திரும்பி சென்று விடுவான். செல்லும் போது பலரை அடிமைகளாக பிடித்துக் கொண்டு போய் மதமாற்றி விடுவான். இவ்வாறு முஹம்மதின் ஊடுறுவலால "சிந்தி ஸ்வாரங்கர் சபையை" சேர்ந்த மக்களும் பிற ஹிந்துக்களும் அவனின் மதமாற்றலில் இருந்து தப்பிக்க சிந்து பகுதிகளில் இருந்து வெளியேறினர்.
முஹம்மது கஜ்னி, ஆயிரக்கணக்கான ஹிந்து ஆலயங்களை அழித்தான். அதில் குஜராத்தில், சௌராஷ்ட்ரா பகுதியில் இருந்த‌ சோமநாதர் ஆலயமும் அடக்க‌ம். அந்த கோவில் மிக அற்புதமாய் இருந்த‌து. அதில் 300 இசைக் கலைஞர்கள், 500 நடன மங்கைகள், 300 பக்தர்களுக்கு முடியெடுக்கும் பணியாளர்கள் என பலர் பணி புரிந்தார்கள். அருமையான 56 தேக்கு தூண்களால் அந்த கோவில் நிறுவப்பட்டிருந்தது என்று சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கி பி 1025ம் ஆண்டு கஜ்னி அதை காத்து நின்ற 50000 மக்களை கொன்றழித்து அதனை அழித்தான். அதை காத்து நின்றவர்களில் 90 வயதான கோக்னா ரானாவும் அடக்கம். முஹம்மது சோமநாதர் ஆலயத்தில் இருந்த லிங்கத்தை உடைத்து அதன் துண்டுகளை மெக்காவிலும் மெதினாவிலும், தன் தர்பாரிலும், க‌ஜ்னி என்ற மசூதி ஆகியவற்றின் வாயில் படிக்கட்டுகளில் பதித்தான். அந்த பேரழிவை நடத்திவிட்டு 61/2 டன் தங்கத்தோடு அவன் நாடு திரும்பினான். இன்றைய வாங்கும் சக்தியோடு ஒப்பிட்டு பார்த்தால் அதன் தற்போதைய மதிப்பு 13 லட்சம் கோடி என்கிறார்கள் பொருளாதார் நிபுண‌ர்கள். அதாவது பத்மநாபர் கோவிலில் கிடைத்த கருவூலத்தை போல் 13 மடங்கு.
ஜகாரியா-அல்-கஜ்வானி எனும் அரேபிய புவி இயல் அறிஞர் சோமநாத ஆலயத்தின் அழிவை பற்றி கூறுகிறார்.
"சோம்நாத நகரம் கடற்கரை ஒரத்தில் அமைந்த நகரம். அந்த கோவிலில் உள்ள அற்புதங்களில் அதன் பிரதான மூர்த்தியான லிங்கம் மிகவும் முக்கியமானது. அந்த லிங்கம் மேலும் கீழும் எந்த வித பிடிப்பும் இல்லாமல் இருந்தது. கோவிலின் மைய பகுதியில் அது இருக்கும். அது காற்றில் அவ்வாறு மிதந்து இருப்பது பார்ப்பவரை அதிசயப்பட வைக்கும். அவர்கள் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் கூட!! ஹிந்துக்கள் அந்த கோவிலுக்கு அம்மாவாசை நாட்களில் தீர்த்த யாத்திரை செல்வார்கள். ஆயிரமாயிரமாய் அங்கு சேர்வார்கள். முஹம்மது அங்கு போர் புரிந்து செல்கையில் அவன் அந்த கோவிலை பிடிப்பதற்கும், அதை அழிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டான். எதற்கென்றால் அதை அழிக்கும் பொருட்டு பல ஹிந்துக்களை முஹம்மதியர்களாய் மாற்றக் கூடும் என்பதால். கடைசியில் அவன் ஒருவழியாய் அதை பிடித்து பல ஆயிரம் ஹிந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றினான். சோமநாதர் ஆலயத்தை அவன் கி.பி. 1025 ஆம் ஆண்டு பிடித்ததும் அந்த லிங்கத்தை வியந்து பார்த்தான். பின்னர் அதை அவனே உடைத்தெறிந்து பின் அதனை எடுத்து வர உத்தரவிட்டான்"
பின்னர் புனரமைக்கப்பட்ட அக்கோவிலை கி.பி. 1296 ஆம் ஆண்டு, சுல்தான் அல்லாவுதின் கில்ஜி அழித்தான். ஆயுதம் இல்லாமல் அதை தடுக்க வந்த 50000 பேர்கள் வாளுக்கு இறையானார்கள். 20 ஆயிரம் பேர் அடிமைகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
மீண்டும் அக்கோவிலை மஹிபாலா தேவா என்கிற சுதாசம அரசர் கி.பி. 1308ம் ஆண்டு கட்டினார். அதை 1375ம் ஆண்டு மீண்டும் முதலாம் முஜாஃபர் ஷா என்பவன் அழித்தான்.
மிண்டும் அது புனரமைக்கப்பட்டது. கி.பி 1451 ஆம் ஆண்டு மஹ்முத் பெக்தா என்பவனால் மீண்டும் அழிக்கப்பட்டது.
பின்னரும் உயிர்பெற்ற அக்கோவிலை, கடைசியாக கி.பி. 1701 ஆம் ஆண்டு ஔரங்கசீப் என்ற கொடுங்கோலனால் மீண்டும் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் அக்கோவிலின் தூண்களை உபயோகப்படுத்தி, ஒரு மசூதி எழுப்பப்பட்டது.
சுதந்திரத்திற்கு பிறகு ஹிந்துக்களின் பெரு முயற்சியால் அக்கோவில்
மீண்டும் எழுந்து நிற்கிறது. ஆனால் அது நமக்கு ஆயிரம் பாடங்களை சொல்லித் தரும் ஒரு பொக்கிஷமாய் உள்ளது. இன்றைக்கு அதன் கோபுரங்கள் உயர்ந்து இருந்தாலும், "எல்லா மதமும் ஒன்றுதான்" என்று கூறும் மூடர்களை கண்டு அது வெட்கத்தால் தலை குனிந்து நின்றுகொண்டிருக்கிறது. சரித்திரத்தின் மிக மோசமான தன்மையே அது மீண்டும் மீண்டும் திரும்புகிறது என்பதுதான் என்று அது நமக்கு ஞாபக படுத்துகிறது. ஒற்றுமையும், அதர்மத்தை தட்டி கேட்கும் தன்மையும் நம்மில் அழிந்துவிட்டதை அது உலகிற்கு பரைசாற்றுகிறது.

Thursday 8 October 2020

அழிவு நிலையில் இந்துக்களும் , இந்துக்கோவில்களும்

 தாய் மதத்தை தவிக்க விட்டு விட்டு...

தரம் தாழ்ந்து...
'#பகுத்தறிவு' இல்லாத பைத்தியகாரர்களாகி விட்ட #இந்துக்களே!
ஒரு அமெரிக்க கிறிஸ்தவரின் "பகுப்பாய்வை'' பாருங்கள்.
இதற்கு துணையாக இருப்பது வேறுயாருமில்லை !!
#இந்துக்களே!" என்கிறார்.
ஸ்டீஃபன் நேப்,
'Crime Against India and Need to Protect Ancient Vedic Traditions'
அதாவது,
'இந்தியாவுக்கு எதிரான குற்றமும், பழம்பெரும் வேதக் கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியமும்'
என்னும் ஓர் ஆராய்ச்சிப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் வெளிடப்பட்டுள்ள இப்புத்தகம், இப்போது வசூலை வாரிக் குவித்து வருகிறது.
அவர் தென் இந்தியாவில் உள்ள, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்துக் கோவில்கள் எப்படி,
மக்களாட்சியில்...
மிகவும் நலிவடைந்து விட்டன. என்பதைப் “புட்டு புட்டு” வைக்கிறார்.
இப்போது,
'மதச் சார்பற்ற நாடு' என்று சொல்லிக் கொள்ளும் இந்தியாவில்...
இஸ்லாமுக்கும், கிறித்தவத்துக்கும் உள்ள சலுகைகள்...
இந்து மதத்துக்கு இல்லாமல் போனது எப்படி?
என்னும் துயரத்தை நன்றாக விளக்குகிறார்.
இன்று,
சில பல சுயநல காரணங்களுக்காக மாற்று மதத்தினரிடம்...
அரசியல்வாதிகள் அடங்கி போகிறார்கள்.
இன்றைய நிலையில் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் அந்தந்த மதத்தினரால் பராமரிக்கப் படுகின்றன.
ஆனால்,
புராதன இந்துக் கோவில்களோ, 1951-ம் ஆண்டில் கொண்டு வரப் பட்ட, “இந்து மதம் மற்றும் தர்மஸ்தாபனங்கள் சட்டப்படி” (Hindu religious and charitable endownments Act) அரசால் எடுத்துக் கொள்ளப் பட்டு விட்டன.
மதச் சாற்பற்ற அரசின் அதிகாரிகள்,
ஒவ்வொருக் கோவிலின் நிர்வாகத்திலும்,
ஆகம விஷயங்களிலும்,
அவற்றின் சொத்துக்களைக் கையாள்வதிலும்,
தங்கள் “மூக்கை நுழைக்க” ஆரம்பித்து விட்டனர்.
இந்த இடையூறு, மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்குக் கிடையாது."
இவ்வாறு
தெளிவாக சொல்கிறார் ஸ்டீஃபன் நேப்.
மேலும் அவர்,
“ ஹிந்துக் கோவில்கள் எல்லாமே, பழங்காலத்தில் இருந்த அரசர்களால் கட்டப் பட்டதாகும்.
அவைகளுக்கு சொத்துக்களையும், ஆபரணங்களையும், அவர்கள் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அவர்கள் பரம்பரையினர், தங்களுக்கு, இக்கோவில்களில் உரிமை ஏதும் இருப்பதாகக் கோர வில்லை.
இப்போது உள்ள ஜனநாயகத்தில்...
இத்தகையக் கோவில்கள் ஒன்று கூடக் கட்டப் படவில்லை.
அப்படி இருக்கும் போது, தங்களுக்குக் கொஞ்சமும் உரிமை இல்லாத் இவ்விஷயத்தில்...அரசு எப்படி நுழைந்து.?
எப்படி இந்து மத வழிபாட்டுத் தலங்களில் தலையிட முடியும்?என்றும் கேட்கிறார்.
ஆந்திராவில் உள்ள 43,000 இந்து கோவில்களின் ஆண்டு வருமானத்தில், 18 % தான், இக்கோவில்களுக்கு செலவழிக்கப் படுகிறது.
மிச்சமுள்ள 82%, அரசின் மற்ற நிர்வாகச் செலவுகளுக்குத் தாரை வார்க்கப் படுகிறது.
திருப்பதி ஸ்ரீ வேங்கடாசலபதியின் ஆண்டு வருமானம் 3,100 கோடி ரூபாய்.
இதில், 83% அரசு எடுத்துக் கொள்கிறது.
ஆந்திர அரசு, 10 புராதனக் கோவில்களை இடித்து...
ஒரு “கால்ஃப்” மைதானம் கட்டுகிறது.
இதைப் போல,
10 மசூதிகளையோ, மாதாகோவில்களையோ இடிக்க எண்ணியிருந்தால் என்ன ஆகி இருக்கும்?" என்று
கேட்கிறார் ஸ்டீஃபன் நேப்.
சிந்திக்க வேண்டிய கேள்வி!!.
கர்நாடகாவில், இந்துக் கோவில்கள் மூலம் ஆண்டுக்கு வரும் 79 கோடி வருமானத்தில்...
7 கோடியைத் தாராளமாக இக்கோவில்களின் பராமரிப்புகளுக்கு அரசு செலவிடுகிறது.
இதில் வயிற்றெரிச்சல் என்னவென்றால்...
59 கோடியை, ஹஜ் யாத்திரைக்குத் திருப்பி விடப் படுகிறது என்பது தான்.
மேலும் இதில், 13 கோடி ரூபாயை சர்ச்கள் பராமரிப்புக்காக அளிக்கிறது கர்நாடகஅரசு.
“ஊரான் வீட்டு நெய்யே: என் பெண்டாட்டி கையே” என்பது இது தான்.
இதுவும்,
ஸ்டீஃபன் நேப்பின் “கூர்நோக்கு பார்வை” தான்.
கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் வருமானத்தை...
அங்குள்ள ஆலய ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட நிதி இல்லாமல்,
அனைத்தையும் சுரண்டிக் கொண்டு போய் விடுகிறார்கள் அரசு தரப்பு.
மேலும்,
இப்போது 'உள் நுழைவு டிக்கெட்டின்' இமாலய விலை பற்றி எவரும் எதிர்த்து பேசாதது கூட வருத்தமளிக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலைச் சுற்றியிருக்கும் வனத் துறைக்கு சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் கொண்டக் காடுகளை...
கிறித்தவர்களுக்குக் கொடுத்து, காட்டை அழித்து வருகிறார்கள்.
இப்போதுள்ள,
“திருவாங்கூர்-கொச்சி சுயாட்சி தேவஸ்வம் போர்டை”
ஓர் அவசரச் சட்டத்தின் மூலம்,
'கலைத்து விடலாமா?' என்று கூட அரசு எண்ணி வருகிறது.
இதுவும் ஒரு அமெரிக்கப் கிறிஸ்தவரின் பகுப்பாய்வு தான்.
நிச்சயமாக, ஸ்டீஃபன் நேப் ஒரு ஹிந்து அல்ல.
இது போல, ஒரிஸ்ஸாவில் உள்ள மிகப் புகழ் பெற்றத் தலமான, பூரி ஜகந்நாதருக்குச் சொந்தமான 70,000 ஏக்கர் நிலத்தை அரசு “ஸ்வாஹா” செய்து விட்டது... என்றும்,
மஹாராஷ்ட்ராவிலும் சுமார் 4 லட்சம் கோவில்கள் நலிவு அடைந்து விட்டதாகவும் வருத்தத்துடன் விவரிக்கிறார்.
நமது தமிழகத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
இந்து அறநிலைய சொத்துக்கள் எப்படியெல்லாம் அழிந்து வருகின்றன...
என்றும்,
கோவில்களுக்கு வர வேண்டிய வருமானம் வசூலிக்கப் படுவதே இல்லை...
என்றும்,
மண்டபபங்களோ, மதில்சுவர்களோ, திருக்குளங்களோ, கொஞ்சம் கூடப் பராமரிக்கப் படுவதில்லை...
என்றும்,
ஆலய ஊழியர்களுக்கு சம்பளம் முறைப்படி வழங்கப்படுவதில்லை...
என்றும்,
அரசு அதிகாரிகள்,
கோவில் சொத்துக்களை தங்கள் இஷ்டம் போல விற்று, வேறு காரியங்களுக்குச் செலவலிப்பது பற்றியும்...
புள்ளி விவரங்களுடன் ஸ்டீஃபன் நேப் விளக்குகறார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் ஏற்பட்டுள்ள ஜனநாயக ஆட்சியில்...
இந்து மத ஆலயங்களுக்கு நிகழ்ந்துள்ள இந்தக் கதிக்கு காரணம்...
முக்கியக் காரணங்களாகக் கூறுகிறார் இவ்வாசிரியர்.
இந்துக்களே!
இனியாவது விழிப்படையுங்கள்.
நம் ஆலயங்களில்,
அரசின் குறுக்கீடுகளைக் களைத்தெறியப் பாடுபடுங்கள்.🙏
ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யும் பிரிவினைவாதிகள் பேச்சைக் கொஞ்சம் கூடக் கேட்காதீர்கள்.
ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் இந்துக் கோவில்களுக்கு எதிராக நடக்கும் தவறுகளை அம்பலப் படுத்துங்கள்.
கட்சி பாகுபாடு இன்றி ஒற்றுமையுடன் தட்டிக் கேளுங்கள்.
இனிவரும் காலத்திவாவது...
நமது இந்து மதத்தை காப்பாற்ற முன் வாருங்கள்.
பகிர்ந்து வந்த தகவல்
MC முருகேசன்.பருகூர்

Wednesday 7 October 2020

தஞ்சை நிசும்பசூதனி

 முன்பொருமுறை எழுதிய நிசும்பசூதனி கட்டுரையை இப்போது இங்கு பதிவிடுகிறேன். நன்றி. 

                   தஞ்சை நிசும்பசூதனி 

  மகா சரஸ்வதி எழில் வடிவினள். வெண் பனியின் மலைச் சிகரத்தில் கருணைச் சிகரமாக அமர்ந்தாள். சிம்மத்தின் மீது அமைதியாக அமர்ந்து வீணாகானத்தில் லயித்திருந்தாலும், அம்பு, உலக்கை, சூலம், சக்கரம், சங்கம், மணி, கலப்பை, வில் ஏந்தி சந்திர ஒளியில் பிரகாசித்திருப்பாள். இமயக்கிரியில் அமைதிக் கோலம் பூண்டவள் வெகு விரைவிலேயே கோரக் கோலமாக சாமுண்டியாகவும், சும்ப, நிசும்பர்களை வதம் செய்யப்போகும் நிசும்பசூதனியாக வெகுண்டெழும் காலம் நெருங்கியது. 

சத்தியத்தின் நேர் துருவங்களாக, கொடுங்கோன்மையின் முழு உருவாக இருந்த சும்ப& நிசும்ப சகோத ரர்களின் அணுக்கத் தொண்டர்களான சண்டனும், முண்டனும் இமயக்கிரியில் திரிந்திருந்தபோது கௌசீகியை கண்டனர். சிம்மத்தின் மீது அமர்ந்த அழகுச் சிகரத்தைப் பார்த்து திகைத்துப் போயினர். தம் அசுரத் தலைவர்களுக்கு இவளை அர்ப்பணித்தால் என்ன என்று குரூரமாக யோசித்தனர். சும்பனிடம் தாம் கண்ட பேரழகுப் பெண்ணைப் பற்றிச் சொல்ல காமம் தலைக்கேறியது, இவளே மாதேவி என அறியாத அற்பன் அவளை தன்னவளாக மாற்றிக் கொள்ள யோசித்தான். அவனின் அழிவு ஒரு விதையாக போக வடிவெடுத்து வந்தது. 

 அசுரனின் அரசவையில் அழகிய குரலையுடையோனான சுக்ரீவன் என்பானை அழைத்தான். 'எப்படியாயினும் இனிய மொழி பேசி அரசவைக்கு அழைத்துவா' என்றான். மன்னனின் கட்டளையை மாதேவ னின் வாக்காக ஏற்று அதிவிரைவாக இமயக் கிரியை அடைந்தான். கிரி கன்னிகையாக அமர்ந்திருந்த கௌசிகீயை பார்த்து, ''சும்பனின் அரசவையை ஒளிரூட்டும் பேரழகு படைத்தவளே...'' என்று தொடங்கி அமிர்த வாக்காலும், மயக்கு வார்த்தைகள் பேசி சம்மதமா என்று முடித்தான். இவள் சம்மதித்து விடுவாள் என்றே முகத்தைப் பார்த்தாள். அதேபோல அவளும் சம்மதம் என்றாள். ஆனால், ''யார் என்னுடன் போரிட்டு வெற்றி பெறுகிறார்களோ அவர்களையே மணப்பேன். அதையே நான் வரமாகப் பெற்றிருக்கிறேன்'' என்றாள். ஒரு வஞ்சகப் பேச்சுக்கு மறு வார்த்தையாக இன்னொரு விஷத்தை வார்த்தைகளில் தோய்த்துப் பேசினாள்.

கடுங்கோபத்தோடு நுழைந்தவன் விவரம் சொல்ல சும்பன் தூம்ரலோசனனை அழைத்தான். 'தூம்ரம்' என்றால் 'புகை' என்று பொருள். பொங்கும் புகையோடு பெரும் படையோடு கிளம்பியவன் கௌசிகீயின் எதிரே கர்ஜிக்க, அவள் வாகனமாக இருந்த சிம்மத்தின் ஹூங்காரத்திலேயே கரைந்து வீழ்ந்தான். தூம்ரலோசனன் மாண்டான் என்பதை கேள்வியுற்ற சும்ப&நிசும்பரின் படைத் தலைவர்களாக விளங்கிய சண்டனும், புத்தியற்ற வெறும் உடற் கொழுப்பு கொண்ட முண்டனும் எங்களுக்கு நிகர்த்தவள் யாரவள் என்று திமிறிக் கிளம்பினர். மாபெரும் படையோடு வந்தவர்கள் கௌசிகீயை பார்த்து, 'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அப்படியே எங்களோடு வந்துவிடு' என ஒரு அம்பை சிம்மத்தின் பிடரி பார்த்துச் செலுத்தினான். 

கௌசிகீயின் கண்கள் சிவந்தது. அசுரப் படையின் ஒரு பகுதியை தம் கதையாலே ஏவித் தாக்கியபோதுதான் முதன் முறையாக சிம்மவாஹினி சாதாரணவள் இல்லை. இவளே சாமுண்டி என்பதை சண்ட, முண்டர்கள் உணர்ந்தார்கள். இதற்குப் பின்னால் தேவர்களின் சூழ்ச்சியே நிறைந்துள்ளது என்று எண்ணியவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கினர். அதுவரை சாந்தமாக இருந்தவளின் நெற்றிப் பொட்டிலிருந்து மாகோரமிக்க அதிபயங்கர உருவோடு காளி வெளிப்பட்டாள்.

தெற்றுப் பற்களோடு கூடிய அதிகோர முகமும், செம்பட்டைச் சடையும், கன்னங்கரியவளாக இருந்தாள். கத்தியும், கழுத்தைச் சுருக்கிட்டு இழுத்துப் போடும் பாசமும், கபாலம் சொருகிய கட்வாங்கம் என்ற குண்டாந்தடியும், அனேக கபாலத்தை மாலையாக பிணைத்து கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டாள். தலையில்லா உடலை இடையில் கட்டி முடிந்திருந்தாள். வரிப்புலியின் தோலை உரித்து சேலையாக்கி போர்த்திக் கொண்டிருந்தாள். உடல் முழுதும் ரத்தக் குழம்பை கஸ்தூரி சந்தனமாகப் பூசிக்கொண்டாள். உலகம் முழுதும் துழாவிப் புசிப்பது போல் நாவைச் சுழற்றியபடி இருப்பவளின் கண்கள் செந்தனல் துண்டங்களை எரிமலையாகப் பொழிந்தது. அவள் கர்ஜிப்பு தாங்காது அசுரர்களின் ரத்தமே உறைந்து போயிற்று.

எங்கேயோ மறைந்திருந்த தேவர்களும், கந்தவர்களும், ஏன் மகேசனும், பிரம்மா, விஷ்ணு போன்றோரும் அங்கு பிரசன்னமாயினர். காணுதற்கு அரியவளாதலால் வானுலகமே விழாக் கோலம் பூண்டது. சும்பனும்  நிசும்பனும் பதவியிழந்து பரலோகம் செல்வோமோ என்று அஞ்சினர். ஆனாலும், அசுர ரத்தமாயிற்றே... 'பராசக்தியே ஆயினும் பாதியாக வகிர்ந்து போடுவோம்' எனப் போர்க்களம் ஓடினர். 

ஒரு கணம் சூரியனை மறைத்து பூமியையே பிளக்கும் பேரதிர்வோடு நின்றிருக்கும் கௌசிகீயிலிருந்து வெளிப்பட்டிருக்கும் சாமுண்டியைப் பார்த்தார்கள். என் படைக்கு எம்மாத்திரம் இவள் என்று கால் உதைத்து நின்றார்கள். மகா யுத்தம் தொடங்கியது. பலப் படைக்கலன்களை அப்படியே விழுங்கி ஜீரணித் தாள். ரத்த ஆறு பெருக்கெடுக்க சும்பனும் அவள் போலவே இன்னொரு கோரவுரு எடுக்க, நிசும்பன்   அம்பைப் பொழிய தேவி அநாயாசமாக அழித்தாள். ஒட்டு மொத்த படைக் கலன்களையும் சிம்மமும்,     சாமுண்டியும் சம்கரிக்க சும்ப நிசும்பர்கள் பலம் மொத்தமும் சேர்த்துக் கொண்டு அருகே வர, தேவியின் வாள் நிசும்பனின் தலையை வெட்டியது. சும்பனை சூலத்தால் மார்பினில் பாய்ச்சினாள். சண்ட, முண்டர்களை அழுத்திக் கொன்றாள். தேவர்களும், வானவரும் கண்களில் நீர் பெருக இருகைகூப்பி துதித்தனர். 'ஜெய் நிசும்பசூதனி' என்று ஜெயகோஷம் எழுப்பினர். இதுவே மகா சரஸ்வதியான சத்தியம், தர்மத்தை நிலைத்துச் செய்ய வந்த நிசும்பசூதனி.

அது சோழர்களின் தொடக்கக் காலம். நிசும்பசூதனியே வெற்றித் தெய்வம். சத்ரு நாசம் செய்யும் மாகாளி என எண்ணிய சோழகுலச் சக்ரவர்த்தியான விஜயாலயச் சோழன் எண்ணூற்று ஐம்பவதாவது வருடம் தஞ்சையில் நிறுவினான். போருக்குச் செல்லும் போதேல்லாம் 'தஞ்சையை காப்பாய் தேவி' என்று அவள் பாதம் பணிந்துவிட்டுத்தான் யுத்த களத்திற்குச் செல்வானாம். மிகவும் ஆதாரப்பூர்வமான திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் ‘‘தஞ்சாபுரீம் சௌத சுதாங்கராகாம.... என்று தொடங்கும் வடமொழி வரிகளில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனி என்ற காளி தேவியை அங்கு பிரதிஷ்டை செய்தான். தேவியின் அருளால் நான்கு கடல்கள் ஆகிய ஆடையை அணிந்து ஒளி வீசுகின்ற பூமியை, ஒரு மாலையை அணிவது போலச் சுலபமாக ஆண்டு வந்தான் என்று முடிக்கிறது. 

மாமன்னன் பரம்பரையை புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் அவள் திருவடி பணிந்தபின்தான் அன்றைய பணியைத் தொடங்குவானாம். போருக்கு முன்பு லட்சம் படை வீரர்களாயினும் சரி இவள் சந்நதியில் வீழ்ந்து வெற்றி வரம் கோரி யுத்தகளம் ஓடுவார்களாம். இவளே தஞ்சையின் காவல் தெய்வம். தஞ்சையின் புகழை தரணியெங்கும் ஒலிக்க விட்ட காருண்ய சூலினி. செல்வம் பெருக்கித் தந்த அட்சய மாகாளி இவளே. அன்றிலிருந்து இன்றுவரை அதேப் பொலிவோடும், அதேசக்தியோடும் விளங்குகிறாள் நிசும்பசூதனி. 

தேவிமகாத்மியம் உரைக்கும் உருவத் தோற்றத்தை சிற்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள் சோழர்கள். மிக கோரமான உருவம். மூக்கு அழுந்தி அதற்குக் கீழே தெற்றுப்பற்கள் துருத்தியிருக்க ஒரு ஓரமாய் தலை சாய்த்து அரை பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள் நிசும்பசூதனி. தீச்சுடர் போன்ற கேசம். வற்றிய தோலும், விலா எலும்புகளோடு கூடிய பதினாறு கைகள். அதில் விதம்விதமான ஆயுதங்கள். பாம்பை கச்சமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். கால்கள் மெல்லியனவாக இருந்தாலும் காலுக்குக் கீழே நான்கு  அசுரர்களை வதைத்து அழுத்தும் கோபத்தை சிற்பத்தில் வடித்திருப்பது பார்க்கப் பிரமிப்பூட்டும். இவர்களே சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன். யுத்த களத்தில் உக்கிரமாக போர் புரியும்போது நெஞ்சு நிமிர்த்தி எதிரியை நோக்கி பாயும் வன்மத்தையும், அதனால் முதுகுப் புறம் சற்று வளைந்து குழிவாக இருப்பதையும், எதிர்காற்றில் கபால மாலைகள் இடப்புறம் பறக்கும் வேகத்தையும் சிற்பமாக்கி கலையின் சிகரம் தொட்டிருக்கிறார்கள். பெண் எனும் சக்தி பொங்கியெழுந்தால் இப்படித்தான் வீருகொண்டெழும் என்பதே நிசும்பசூதனி சொல்லும் விஷயம். அதேசமயம் தர்மத்தின் பக்கம் நிற்கும் நீதி தேவதை.  

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியிலுள்ள  பூமால் ராவுத்தர் தெருவில் வடபத்ரகாளியம்மன் கோயிலென்று இதை அழைப்பார்கள். இக்கோயில் அமைந்துள்ளது.

 '' பாற்கடலை கடைய அமுதம் வருமா?

பைத்தியக்காரத்தனம்.

அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம். வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம் - யப்பா முடியலடா சாமி.

இதைவிட ஒரு காமெடி என்னன்னா

அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம். கேட்டா அது விஷ்னுவோட அவதாரமாம். அவ்ளோ பெரிய ஆமையை Discovery சேனல்ல கூட காமிக்கலையே.

தேவர்களும்,அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம்.

அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம். அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம். 

சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம். 

விஷத்த குடிச்சா சாமி சாகுமா?இல்ல அப்படி செத்தா அது சாமியா?

அப்புறம் அமுதம் வந்துச்சாம்.  அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம்.

இப்படி ஒரு Fantacy கதைய Hollywood படத்துல கூட சொன்னதில்ல. இந்த கதையையெல்லாம் நம்பிக்கிட்டு இன்னமும் நீ சாமி கும்பிட்டுகிட்டு இருக்க. '' 

---  இப்படி தன் இரவல் அறிவையெல்லாம் ஒன்று திரட்டி ரொம்ப பெரிய கஷ்டமான கேள்வியக் கேட்டு விட்டதாகவும் 

என்னை மட்டம் தட்டி விட்டதாகவும் இருமாந்திருந்தார் நண்பர் ஒருவர்(பாவம் சமீபத்தில்தான் பகுத்தறிவு பால்வாடியில் சேர்ந்திருப்பார் போல).

🌿🌿

நான் நிதானமாக சொன்னேன்... 

''இந்து கலாச்சாரத்தில் சொல்லப்படுகின்ற கதைகள் எல்லாம் உருவகங்கள்.

மிகப்பெரிய தத்துவங்களை எல்லாம் குழந்தைக்கு கூட புரியும் வண்ணம் புனையப்பட்ட உருவகக்கதைகள் இவை.

இவற்றை  அப்படீயே எடுத்துக்கொண்டு வாதிடுவது அறிவுடைமை ஆகாது.

அதனால் Encoding செய்யப்பட்ட உருவகங்களை Decoding செய்தால் போதும். பொருள் அதுவாகவே விளங்கும்.

சரி. இப்போது இந்த பாற்கடல் கதையை Decode செய்கிறேன்.

பாற்கடல் - குண்டலினி சக்தி

மேருமலை - முதுகுத்தண்டு

வாசுகி பாம்பு - மூச்சுக்காற்று

(உஷ் ...உஷ்னு சத்தம் வருதா)

தேவ,அசுரர் - இடகலை,பிங்கலை(நாடி)

ஆமை - ஐம்புலன்களையும் அடக்கி ஆளும்தன்மை

தொண்டைக்குழி - விசுக்தி

விஷ்னு - வாழ்வு

ஆலகாலவிஷம் - கபம்

அமுதம் - நித்ய வாழ்வு 

(மரணமில்லா பெருவாழ்வு)

அதாவது முதுகுத்தண்டின் இரு பக்கமும் செல்லும் இடகலை,பிங்கலை நாடி வழியே மூச்சுக்காற்று சதா ஓடிக்கொண்டிருக்கிறது.

(இதைத்தான் சிவவாக்கியர் சங்கிரண்டையும் தவிர்ந்து தாரை ஊதச் சொன்னார்)

ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்கி அதை ஆதாரமாகக் கொண்டு வாசி யோகம் மூலம் இடகலை ,பிங்கலை வழியே மாற்றி மாற்றி 

மூச்சுக்காற்றை இழுக்கும்போது (நாடி சுத்தி) நித்யப் பெருவாழ்விற்கான அமுதம் சுரக்கும் அதை உண்டவர்கள் தேவர்கள் போல மரணமில்லா பெருவாழ்வு அடைவர்.

ஆனால் இந்தப்பயிற்சியின் போது அளவுக்கதிகமான கபமே முதலில் வெளிப்படும் 

ஆனால் பரம்பொருள் சிவனின் கருணையால் அந்த கபத்தை கலைத்துவிடும்.

(சந்தேகம் இருப்பின் வாசி யோகம் பயின்றவரிடம் கேட்டு தெளிவு பெறலாம்)''

- என்று விளக்கினேன்.அவரும் பாவம் வேறொருவருக்கு பாடம் எடுக்க சென்றுவிட்டார்.

விநாயகர் சக்தியின் அழுக்குருண்டையில் பிறந்தவராமே -என்று.


🌿🌿

அவர் கிடக்கட்டும்.உங்களுக்காக (புரிந்து கொள்ள நினைப்போருக்கு) 

மேலும் சில உருவகங்களின் Decodings...

🌷ஒரே இறைவன்(இஸ்லாம்) - அத்வைதம் (Oneness)

🌷சக்தி,சிவன் - துவைதம்(Duality)

🌷பிதா,சுதன்,பரிசுத்த ஆவி - விசிஷ்டாதுவைதம் (கிறித்துவம்)

- உருவகம்

🌷சும்மா இருந்தால் சிவம்(Static) 

🌷ஓயாமல் அசைந்தால் சக்தி(Dymnamic)

🌷சக்தி இல்லையேல் சிவம் இல்லை-உருவகம்

🌷திரிசூலம்-இச்சா சக்தி,கிரியா சக்தி,ஞான சக்தியின் உருவகம்

🌷கணபதியை(பூமி) சக்தி (Dynamic force)

அழுக்கை(Dust of universe )உருட்டி படைத்தாள்-இது பூமி தோன்றலின் உருவகம்.

🌷தில்லை நடராசர் நடனம்-Cosmic dance ன் உருவகம் (அறிவியல் ஏற்றுக்கொண்டது)

🌷சிவன் (யோக சக்தி),திருமால் (போகசக்தி)

இவற்றின் கலவையான சக்தியே ஐயப்பன்-உருவகம்.

🌷முப்பரிமாணம் மட்டுமே உணரக்கூடிய மனித மூளைக்கு நாலாவது பரிமானமான காலத்தை உணர்த்த மகாகாலன்,

அதன் எதிர்பரிமாணம் மகாகாளி - உருவகம்

🌷பிறப்பை அருளும் தாயின் உருவத்தை மரணத்தை அருளக்கூடிய கோர உருவமாக காளியாகபடைத்தது 

ஜனனமும்,மரணம் இறைவனக்கு ஒன்றே என உணர்த்தும் உருவகம்

🌷வாயு மைந்தன் அனுமன்(குரங்கு போன்ற நிலையில்லாத மனம் யோகம் பயின்றால் கடவுளாகும் தகுதி உண்டு என்ற தத்துவம்

- மனத்தின் உருவகம்

🌷கருடாழ்வார்-மூச்சின் உருவகம்

🌷சூரியனின் ஏழு குதிரைகள் நிறப்பிரிகை-VIBGYOR உருவகம்

🌷தசாவதாரம் பரிணாம வளர்ச்சியின் உருவகம்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

🌷ஆணும் பெண்ணும் சமம் என உணர்த்தும் அர்த்தநாரீஸ்வரர் உருவகம்.

எல்லாம் உணர்ந்தோர் ஏதும் உணராதோர்க்கு தான் உணர்ந்ததை உணர்த்த ,

ஏதும் உணராதோர் உணர்ந்த தன்மையின் அடிப்படையில் தாம் உணர்ந்ததை (தத்துவத்தை) உருவகமாக்கி

உணர்த்தினர்.

நீங்களாவது உணர்ந்து கொண்டீரா?

உணர்ந்து கொண்டோர் பகிர்ந்து கொள்வர்.